Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வீட்டில் பிணமாகக் கிடக்கும் நடிகைகள்: தனியாக வசிக்கும் பெண்களே உஷார்!
சென்னை: நடிகை சபர்ணாவை போன்றே மும்பையில் ஒரு நடிகை அழுகிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நடிகைகள் தங்களின் வீட்டிலேயே பிணமாகக் கண்டுபிடிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சிலர் விஷயத்தில் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியாமலேயே போய் விடுகிறது.
இந்நிலையில் மும்பையில் ஒரு நடிகை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
க்ரித்திகா
மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வந்த நடிகை க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சபர்ணா
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
ஜெயஸ்ரீ
சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயஸ்ரீ தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஜியா கான்
முன்னதாக பாலிவுட் நடிகை ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.