Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
லென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு!
மெர்சல் பட பஞ்சாயத்துகளுக்கு பிறகு தமிழ்ப் படங்களை பார்க்கும்போது மத்திய அரசுக்கு எதிராக காட்சியோ வசனமோ வந்துவிடப் போகிறது என்று பூதக் கண்ணாடி வைத்து கண்காணிக்கிறதாம் சென்சார் போர்டு.
இரண்டு வரி வசனங்கள் மூலம் ஒரு சுமாரான படத்தை சூப்பர் ஹிட் படமாக்கி விட்டது மெர்சல் படக்குழு. மத்திய அரசை எப்படி விமர்சிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்ப அது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
மெர்சல் ஃபார்முலாவைப் பார்த்த தமிழ் சினிமா ஆட்கள் தயாராகும் படங்களிலும் வலுக்கட்டாயமாக அரசை விமர்சிக்கும் விஷயங்களை நுழைக்கிறார்களாம். இப்போதுகூட விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடல் இடம்பெற்று பின் அதை இஎம்ஐ பாடலாக மாற்றியிருக்கிறார்கள்.
சென்சார் போர்டு மீது மெர்சல் விஷயத்திலேயே மத்திய அரசுக்கு அதிருப்தி நிலவுவதால் இப்போது பார்வைக்கு வரும் படங்கள் எல்லாம் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனவாம்.