twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு!

    |

    மெர்சல் பட பஞ்சாயத்துகளுக்கு பிறகு தமிழ்ப் படங்களை பார்க்கும்போது மத்திய அரசுக்கு எதிராக காட்சியோ வசனமோ வந்துவிடப் போகிறது என்று பூதக் கண்ணாடி வைத்து கண்காணிக்கிறதாம் சென்சார் போர்டு.

    இரண்டு வரி வசனங்கள் மூலம் ஒரு சுமாரான படத்தை சூப்பர் ஹிட் படமாக்கி விட்டது மெர்சல் படக்குழு. மத்திய அரசை எப்படி விமர்சிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்ப அது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

    Censor board deeply monitors new movies

    மெர்சல் ஃபார்முலாவைப் பார்த்த தமிழ் சினிமா ஆட்கள் தயாராகும் படங்களிலும் வலுக்கட்டாயமாக அரசை விமர்சிக்கும் விஷயங்களை நுழைக்கிறார்களாம். இப்போதுகூட விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடல் இடம்பெற்று பின் அதை இஎம்ஐ பாடலாக மாற்றியிருக்கிறார்கள்.

    சென்சார் போர்டு மீது மெர்சல் விஷயத்திலேயே மத்திய அரசுக்கு அதிருப்தி நிலவுவதால் இப்போது பார்வைக்கு வரும் படங்கள் எல்லாம் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனவாம்.

    English summary
    Nowadays the regional censor board is monetoring every frames of the movie to avoid anti government scenes or dialogues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X