Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டிலைட் தியேட்டர்: நினைத்ததை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்
கோவை: தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான டிலைட் திரையரங்கம் பராமரிப்பு பணிகள் முடிந்து, முதல் படமாக புதிய தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட உள்ளது.
இன்றைக்கு படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் எடுக்க சென்னையிலும், அவுட்டோர் ஷூட்டிங்குகள் வெளியூர்களிலும் எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சினிமா நுழைந்த ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் உருவாக்கப்பட்டன.
அப்படி உருவாக்கப்பட்ட சினிமா தியேட்டர் தான் வெரைட்டி ஹால் என்றழைக்கப்படும் இன்றைய டிலைட் தியேட்டர். கடந்த 1914ஆம் அண்டு இந்த தியேட்டர் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் தியேட்டர் ஆகும்.
கோவையில் தொடர்ந்து பல தியேட்டர்கள் கட்டப்பட்டு, இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலைகளை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் நாளடைவில் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் உருமாறிவிட்டன.
தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில், பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில் ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது.
இந்நிலையில், சில நாட்களாக தியேட்டரில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து மீண்டும் புதுப்பொலிவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் தித்திக்கும் காவியம் என்ன தெரியுமா, மக்கள் திலகம் எம்ஜிஆரின் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள நினைத்ததை முடிப்பவன் காவியம் திரையிடப்பட்டு புரட்சித்தலைவரின் பக்தர்கள் விழா கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்.
கோவையில் முதல் ஸ்டூடியோ பட்சிராஜா ஸ்டூடியோ இரண்டாவது சென்ட்ரல் ஸ்டூடியோ எம்ஜிஆர், கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் இங்கே இருந்துதான் நடித்து, பின்னர் சென்னை சென்றனர் எம்ஜிஆருக்கும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நட்பு ஏற்பட்டு பால்ய நண்பர்கள் ஆனதும் இங்கே தான்.