Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திகில் படங்களால் தூக்கம் போகிறது, நோய் பரவுகிறது... சந்திரபாபு நாயுடு தாக்கு
விஜயவாடா: சமூகத்தை கெடுக்கும் வகையில் உருவாகும் சில திகில் படங்களால் மக்களுக்கு நோய் ஏற்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அண்ணன் மகன் நாரா ரோகித் நாயகனாக நடித்துள்ள தெலுங்குப் படம் ராஜா செய் வேஸ்டே. என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி தாரக் ரத்னா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பாடல் சிடியை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மகிழ்ச்சி...
எனது குடும்ப உறுப்பினர்கள் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.
என்.டி.ராமராவ்...
சினிமாவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. சினிமாவில் இருந்த என்.டி.ராமராவ்தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். இந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அரசியலும் தெரியும், சினிமாவும் தெரியும்.
பாலகிருஷ்ணா...
பாலகிருஷ்ணா படம் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது சில படங்கள் வருகிறது. சமூகத்தை கெடுக்கும் வகையில் அது இருக்கிறது.
திகில் படங்கள்...
சில படங்களை பார்த்தால் பயமாக இருக்கும். இரவில் தூக்கம் வராது. தூக்கம் வராததால் இல்லாத நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
வாழ்த்துக்கள்...
அந்த வகையில் இல்லாமல் இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என வாழ்த்துகிறேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.