Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சந்திரபாபு நாயுடு மகனுக்கும் கை கொடுக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாக்!
திருப்பதி: தந்தை சந்திரபாபு நாயுடுவுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்யும் மகன் லோகேஷ், ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகளை தெலுங்கில் பேசி மக்களைக் கவர்ந்துள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் 'யுவ பிரபஞ்சனம்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் 'பஞ்ச் டயலாக்கை' பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
ரஜினி நடித்த படையப்பா படம் ''நரசிம்ஹா'' என்ற பெயரில் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது.
இந்த படத்தில் வரும் ''அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்ற பஞ்ச் மிகப் பிரபலம்.
இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி வாக்கு கேட்கிறார்.
சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி இருவரையும் இந்த வசனத்தைச் சொல்லி பகிரங்கமாக தாக்குகிறார்.
"சோனியா 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி வருகிறார்.