Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சந்திரபாபு நாயுடு மகனுக்கும் கை கொடுக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாக்!
திருப்பதி: தந்தை சந்திரபாபு நாயுடுவுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்யும் மகன் லோகேஷ், ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகளை தெலுங்கில் பேசி மக்களைக் கவர்ந்துள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் 'யுவ பிரபஞ்சனம்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் 'பஞ்ச் டயலாக்கை' பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
ரஜினி நடித்த படையப்பா படம் ''நரசிம்ஹா'' என்ற பெயரில் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது.
இந்த படத்தில் வரும் ''அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்ற பஞ்ச் மிகப் பிரபலம்.
இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி வாக்கு கேட்கிறார்.
சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி இருவரையும் இந்த வசனத்தைச் சொல்லி பகிரங்கமாக தாக்குகிறார்.
"சோனியா 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி வருகிறார்.