Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சந்திரபாபு நாயுடு மகனுக்கும் கை கொடுக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாக்!
திருப்பதி: தந்தை சந்திரபாபு நாயுடுவுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்யும் மகன் லோகேஷ், ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகளை தெலுங்கில் பேசி மக்களைக் கவர்ந்துள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் 'யுவ பிரபஞ்சனம்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் 'பஞ்ச் டயலாக்கை' பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
ரஜினி நடித்த படையப்பா படம் ''நரசிம்ஹா'' என்ற பெயரில் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது.
இந்த படத்தில் வரும் ''அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்ற பஞ்ச் மிகப் பிரபலம்.
இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி வாக்கு கேட்கிறார்.
சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி இருவரையும் இந்த வசனத்தைச் சொல்லி பகிரங்கமாக தாக்குகிறார்.
"சோனியா 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி வருகிறார்.