Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு!
பாகுபலி 2 படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பாகுபலி முதல் பாகம் ஆஸ்கருக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்துக்கு அந்த நிலை வராத அளவுக்கு வேலைகளைச் செய்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்தப் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் நிச்சயமாக சிபாரிசு செய்வேன்.
பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப் போகிறேன். இந்திய சினிமாவை தலை நிமிர வைத்துவிட்டது இந்தப் படம்," என்றார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் இந்தியப் படமாக பாகுபலி 2 இருக்கும் என்பது ஓரளவுக்கு இப்போதே உறுதியாகிவிட்டது. மத்திய அரசில் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு அந்த அளவுக்கு உள்ளது.