Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
நடிகர் சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து தமிழ்த் திரையுலகம் மெளனமாக இருப்பது வேதனையளிப்பதாக நடிகர் சங்கத் துணைத் தலைவர்எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டனா என்ற இடத்தில் படப்பிடிப்புக்காகச் சென்ற சமுத்திரம் படக்குழுவினர் மீதுகன்னட வெறியர்கள் கடுமையாக தாக்கினர். இதில் நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில்மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தாக்கப்பட்டனர்.
தமிழ்ப் படக்குழுவினர் இத்தனை பேர் தாக்கப்பட்டும் தமிழ்த் திரையுலகம் எந்தக் கவலையும் தெரிவிக்காதுமெளனமாக இருந்து வருகிறது. நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், துணைத் தலைவர் நெப்போலியன், இயக்குநர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் சங்கம் (ஃபெப்சி) என அத்தனை பேரும் அமைதியாக இருந்துவருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன் தாக்குதல் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியைவெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் கன்னடவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
நான் அ.தி.மு.க. நடிகர்தான். இருந்தாலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்திருப்பது சினிமாக்காரன் என்ற உணர்வுஎனக்கு உள்ளது. நடிகர் சரத்குமார் போன்ற முன்னணிக் கலைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து தமிழ்த் திரையுலகம்வாய் மூடி, மெளனியாக நிற்பது ஏன் என்று தெரியவில்லை.
தமிழ், தமிழன் என்று அடிக்கடி வசனம் பேசும் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருக்கிறார்?. தமிழர் என்ற உணர்வு அவருக்கு மங்கிப் போய் விட்டதா, தனது தளபதி என்று அவர்வர்ணிக்கும் சரத்குமார் தாக்கப்பட்டும் கூட அமைதியாக இருக்கிறாரே?
சரத்குமார் ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த நெப்போலியன் கூட அமைதியாக இருப்பதுகொடுமையானது.
இந்த நிலை நீடித்தால் போகிற இடமெல்லாம் தமிழ் சினிமாக்காரர்கள் அடி வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்என்றார் சந்திரன்.