Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே !
Recommended Video
சென்னை: வடதுருவத்தில் பாட்டி வடையும்! தென் துருவத்தில் நிலா சோறும்! சுவைத்தபடி நங்கள் நடந்து செல்வோம்! முயற்சி எனும் கயிறை ஒரு போதும் விடமாட்டோம்! என்று நடிகை நித்யா கவிதை பாடியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நமக்கு மிகவும் பரிச்சயமான முகம் நித்யா ரவீந்திரன். தனது சிறு
வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக நடித்தவர். இவரது தந்தை ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்தாலும் நாடகங்கள் நடத்துவதை ஒரு பொழுதுபோக்காக நடத்தியவர். அவர் நடத்திய அத்தனை நாடகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அரிதாரம் பூசியவர் நித்யா. பிறகு இயக்குனர் விசு, மௌலி போன்றவர்களின் பட்டறையில் கலக்கியவர்.
80களில் தெலுங்கு படங்களில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் சகோதரியாக நடித்தவர் என்ற பெருமையும் உண்டு. தனது சிறு வயதிலேயே தந்தையின் அறிவுரையின்படி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரைத்துறையில் நுழைந்து அவரது திறமையை வெளிகொண்டு வந்தார். பெரிய திரை, சின்னத்திரை மட்டுமின்றி திரைக்கு வெளியேயும் பல திறைமைகளை கொண்டுள்ளவர்.
தரக்குறைவாக பேசிய நெட்டிசன்.. நச் பதிலடி கொடுத்த பார்த்திபன்! அப்ளாஸை அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!
நடிப்போடு மட்டுமின்றி பல சீனியர் கதாபாத்திரங்களுக்காக டப்பிங் சேய்து வருகிறார். படு பிஸியாக இருந்தாலும் தமிழ் மீது அவருக்கு தீராத தாகம் உண்டு. அந்த வகையில் தற்போது நிகழ்த்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டதையும் அது சில காரணங்களால் தனது தொடர்பு கொள்ளும் தன்மையை இழந்தது குறித்தும் அவரது பதிவை ஒரு கவிதையாக பதிவிட்டுள்ளார்.
" எப்படியாவது தொடர்புகொள், இதுதான் வேண்டுவது !
தண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே !
தொடும் தூரத்தில் இருக்கிறோம் தொடர்பு தான் துண்டித்தது!
சுற்றித்தான் வருகிறோம் சமிக்ஞை தான் நின்றது !
படம் பிடிக்கும் நேரத்தில் வெட்கத்தில் தட்டினாயோ !
அமாவாசைவந்ததென்று
மறந்து பொய் மாற்றினாயோ !
இந்தியனே வா என்று அரவணைப்பில் அழுத்தினாயோ !
உலகமே கேள் என்று மௌனத்தை அனுப்பினாயோ !
உன் மறுபக்கத்தை காண ஆசைப்பட்டது எம் இனம்!
மனம் இறுக்கம் சேர்ந்து விட அசைவற்று போனது பூமியும்!
தனியான லேண்டரை பார்த்துகொள்!
துணையாக இருக்கட்டும் வைத்துக்கொள்!
ஒரு நாள் இந்தியா வந்து செல்!
சிவனின் உழைப்பை பார்த்து செல்!
விரைவில் வருவோம் தமிழில் கதைத்தபடி,
வரவேற்க காத்திரு வெற்றிலை பாக்குடன்!
கரம் நீட்டி வாவென்று சொல்!
கறைகளை துடைத்து விட்டு திரும்புவோம்!
வடதுருவத்தில் பாட்டி வடையும்!
தென் துருவத்தில் நிலா சோறும்!
சுவைத்தபடி நங்கள் நடந்து செல்வோம்!
முயற்சி எனும் கயிறை ஒரு போதும் விடமாட்டோம்!
உன் மேலே பாரத கோடி பட்டொளி வீசும் !
தலை நிமிர்ந்து பார்த்த படி சரித்திரம் பேசும்!
எங்களின் சிவனின் குரல் உடைந்தது!
இந்தியர்களின் இதயத்தில் தடை தட்டியது!
எங்கோ இருக்கும் உனக்கு யார் சொல்வது?
எப்படியாவது தொடர்பு கொள் - இதுதான் வேண்டுவது!
எப்படியாவது தொடர்பு கொள் -இதுதான் வேண்டுவது.
ஜெய் ஹிந்த்! ஜெய் இஸ்ரோ !