முன்னணி நடன நடிகை தற்கொலை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ள துணைநடிகையான சந்திரிகா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தாஸ். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் ஒரு நடன நடிகர். இவரது முதல் மனைவிஅனிதா. இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் முதல் மனைவியின் சம்மதத்துடன் சந்திரிகாவை இரண்டாவது மனைவியாகத்திருமணம் செய்து கொண்டார்.இதில் சந்திரிகா மிகவும் பிஸியாக நடித்து வந்தார். பிரபு தேவா, ராஜு சுந்தரம் ஆகியோரின் குழுவில் முக்கிய நடன நடிகையாகஇவர் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான படங்களில் பாடல் காட்சிகளில் முதல் வரிசையில் நின்று ஆடியிருக்கிறார் சந்திரிகா.தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடனமாடியுள்ளனர்.தாஸ் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர். முதல் மனைவியை காதல் திருமணம் செய்த தாசுக்கு சந்திரிகாவுக்கும் காதல்ஏற்பட்டது. பின்னர் இது திருமணத்தில் முடிந்தது.சந்திரிகாவைத் திருமணம் செய்த பிறகும் தாஸுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் கோபமடைந்த சந்திரிகா படுக்கை அறைக்குள் வேகமாக சென்று கதவை பூட்டிக் கொண்டார்.பயந்து போன தாஸ், வேகமாக சென்று கதவைத் திறக்குமாறு கூறி நீண்ட நேரம் போராடினாராம். ஆனால் உள்ளேயிருந்து சப்தம்ஏதும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது சந்திரிகா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்றுகூறப்படுகிறது.உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் தாஸ். அங்கு சந்திரிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.இந் நிலையில், தகவல் அறிந்து வந்த சந்திரிகாவின் தாயார் சுகுணா, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அசோக் நகர்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

By Staff

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ள துணைநடிகையான சந்திரிகா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தாஸ். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் ஒரு நடன நடிகர். இவரது முதல் மனைவிஅனிதா. இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் முதல் மனைவியின் சம்மதத்துடன் சந்திரிகாவை இரண்டாவது மனைவியாகத்திருமணம் செய்து கொண்டார்.

இதில் சந்திரிகா மிகவும் பிஸியாக நடித்து வந்தார். பிரபு தேவா, ராஜு சுந்தரம் ஆகியோரின் குழுவில் முக்கிய நடன நடிகையாகஇவர் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான படங்களில் பாடல் காட்சிகளில் முதல் வரிசையில் நின்று ஆடியிருக்கிறார் சந்திரிகா.

தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடனமாடியுள்ளனர்.

தாஸ் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர். முதல் மனைவியை காதல் திருமணம் செய்த தாசுக்கு சந்திரிகாவுக்கும் காதல்ஏற்பட்டது. பின்னர் இது திருமணத்தில் முடிந்தது.


சந்திரிகாவைத் திருமணம் செய்த பிறகும் தாஸுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சந்திரிகா படுக்கை அறைக்குள் வேகமாக சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

பயந்து போன தாஸ், வேகமாக சென்று கதவைத் திறக்குமாறு கூறி நீண்ட நேரம் போராடினாராம். ஆனால் உள்ளேயிருந்து சப்தம்ஏதும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது சந்திரிகா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்றுகூறப்படுகிறது.

உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் தாஸ். அங்கு சந்திரிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந் நிலையில், தகவல் அறிந்து வந்த சந்திரிகாவின் தாயார் சுகுணா, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அசோக் நகர்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more about: actress commits suicide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X