Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி கள்ளம் கபடமில்லாத மனிதர்: சரண்ராஜ்
எண்பதுகளில் மோஸ்ட் வான்ட்டட் வில்லனாக வலம் வந்தவர் சரண்ராஜ். இதோ அவரது மகன் ஹீரோவாக நடிக்க தயாராகிவிட்டார். ஆனாலும் அண்ணனைப் போல இளமை மாறாமல் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரியா என பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சென்னைதான் அவரது வசிப்பிடம். குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இன்றைக்கும் அவருடன் நல்ல நட்பு பாராட்டுபவர். ரஜினியுடனான நேசம் பற்றியும், மகன் கதாநாயகனாக நடிப்பது பற்றியும் பிரபல வார இதழில் தெரிவித்துள்ளார்.
ரஜினி பெஸ்ட்
சினிமாவில் நிறைய பேருடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாது. நடிப்பை தாண்டி அவரிடம் ஒரு மனித நேயம் இருக்கிறது.
கொஞ்சமும் மாறவில்லை
எண்பதுகளில் பார்த்த ரஜினி துளி கூட மாறாமல் அப்படியே இருக்கிறார். கள்ளம் கபடமில்லாத மனசு ரஜினியிடம் இருக்கிறது.
பாராட்டிய ரஜினி
பூ ஒன்று புயலானது படத்தினை பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை பாராட்டினார். ஒரு சூப்பர் ஹீரோ வளர்ந்து வரும் வில்லன் நடிகரைப் பார்த்து பாராட்டியது மறக்க முடியாத அனுபவம்.
மகனின் வளர்ச்சி
நான் நடிக்க வந்த பின்னர்தான் நடிப்பு, நடனம், பைட் கற்றுக் கொண்டேன். இன்றைக்கு என் மகன் தேஜ் சரண் நடனம், சினிமா சண்டை என கற்றுக் கொண்டே நடிக்க வருகிறார். பாலுமகேந்திரா ஸ்கூலில் நடிப்பு பயிற்சி கற்றுக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை கஷ்டம் இல்லாமல் போவது கடவுள் செயல் என்று கூறியுள்ளார் சரண்ராஜ்.