twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி கள்ளம் கபடமில்லாத மனிதர்: சரண்ராஜ்

    By Mayura Akilan
    |

    எண்பதுகளில் மோஸ்ட் வான்ட்டட் வில்லனாக வலம் வந்தவர் சரண்ராஜ். இதோ அவரது மகன் ஹீரோவாக நடிக்க தயாராகிவிட்டார். ஆனாலும் அண்ணனைப் போல இளமை மாறாமல் இருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரியா என பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சென்னைதான் அவரது வசிப்பிடம். குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டவர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இன்றைக்கும் அவருடன் நல்ல நட்பு பாராட்டுபவர். ரஜினியுடனான நேசம் பற்றியும், மகன் கதாநாயகனாக நடிப்பது பற்றியும் பிரபல வார இதழில் தெரிவித்துள்ளார்.

    ரஜினி பெஸ்ட்

    ரஜினி பெஸ்ட்

    சினிமாவில் நிறைய பேருடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாது. நடிப்பை தாண்டி அவரிடம் ஒரு மனித நேயம் இருக்கிறது.

    கொஞ்சமும் மாறவில்லை

    கொஞ்சமும் மாறவில்லை

    எண்பதுகளில் பார்த்த ரஜினி துளி கூட மாறாமல் அப்படியே இருக்கிறார். கள்ளம் கபடமில்லாத மனசு ரஜினியிடம் இருக்கிறது.

    பாராட்டிய ரஜினி

    பாராட்டிய ரஜினி

    பூ ஒன்று புயலானது படத்தினை பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை பாராட்டினார். ஒரு சூப்பர் ஹீரோ வளர்ந்து வரும் வில்லன் நடிகரைப் பார்த்து பாராட்டியது மறக்க முடியாத அனுபவம்.

    மகனின் வளர்ச்சி

    மகனின் வளர்ச்சி

    நான் நடிக்க வந்த பின்னர்தான் நடிப்பு, நடனம், பைட் கற்றுக் கொண்டேன். இன்றைக்கு என் மகன் தேஜ் சரண் நடனம், சினிமா சண்டை என கற்றுக் கொண்டே நடிக்க வருகிறார். பாலுமகேந்திரா ஸ்கூலில் நடிப்பு பயிற்சி கற்றுக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை கஷ்டம் இல்லாமல் போவது கடவுள் செயல் என்று கூறியுள்ளார் சரண்ராஜ்.

    English summary
    Actor Charanraj has hailed super star Rajinikanth as a simple and wonderful man.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X