Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!
திருவனந்தபுரம்: யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் நடிகர் மோகன் லால் மீது 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறை அமைச்சரின் தலையீட்டால் மோகன் லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வன உயிர் பாதுகாப்புச் சட்டப்பிரிவின்படி தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனைதொடர்ந்து மோகன் லாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.