Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எனக்கும், பிரபல இயக்குனருக்கும் இடையே கள்ளத்தொடர்பா?: சிம்பு நாயகி பதில்
Recommended Video
ஹைதராபாத்: பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் தனக்கும் இடையே தொடர்பு உள்ளதாக பேசப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை சார்மி.
காதல் அழிவதில்லை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சார்மி கவுர். அவர் தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆகி தெலுங்கு படங்களை தயாரித்து வருகிறார்.
அவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறார்.
சார்மி
சார்மிக்கும், ஏற்கனவே திருமணமான பூரி ஜெகன்னாத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சார்மி.
தயாரிப்பு
நானும், பூரி ஜெகன்னாத்தும் சேர்ந்து படம் தயாரிக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வேலை பார்ப்பதால் எங்களுக்கு இடையே காதல் என்று பேசுகிறார்கள். ஆண், பெண் சேர்ந்து வேலை பார்ப்பதை தவறாக பார்க்கும் எண்ணம் மாற வேண்டும் என்கிறார் சார்மி.
திருமணம்
எனக்கு காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லை. தற்போது நான் சுதந்திரகமாக உள்ளேன். திருமணம் செய்தால் கணவர் சொல்படி தான் நடக்க வேண்டும். எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று எல்லாம் சொல்ல வேண்டும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை பணம் தான் என்று சார்மி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
கணவன் சம்பாதித்தால் தான் மனைவிக்கு பாதுகாப்பு. இல்லை என்றால் வாழ்க்கை கஷ்டமாகிவிடும். பங்களா, கார் என்று சொகுசாக உள்ளேன். நினைத்த நேரம் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சாப்பிட பணம் உள்ளது. இதுவே எனக்கு போதும். திருமணம் செய்ய விரும்பவில்லை. நான் சிங்கிளாக மகிழ்ச்சியாக உள்ளேன் என்று சார்மி கூறியுள்ளார்.
தயாரிப்பு
வாழ்க்கை முழுவதும் நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. அதனால் தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை இல்லை என்கிறார் சார்மி.