த்ரிஷாவால் விஜய் வீட்டில் வெடித்த பிரச்சனை.. சங்கீதா எப்படி பொருத்துப்பாங்க.. விளாசிய சேகுவேரா!
சென்னை: விஜய் லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே இருவர் குறித்தும் சர்ச்சைகள் பரவத் தொடங்கிவிட்டது. விஜய் மனைவியை பிரிய காரணமே த்ரிஷா தான் என்று பலரும் பேசி
வரும் நிலையில், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, இருவரும் ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்று வந்தனர். இது சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் தளத்தில் பேசிஉள்ளார்.

த்ரிஷாவும் விஜய்யும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு ஒன்றாகத்தான் வந்தார்கள், அதுமட்டுமில்லாமல் பல பொது நிகழ்ச்சிக்கும் இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். அதன்பிறகு த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக்கொண்டு இருந்ததால், சர்ச்சை வராமல் இருந்தது. அதன்பிறகு, லியோ படத்தில் த்ரிஷா கமிட் ஆனதால், சர்ச்சை மேலும் அதிகமானது. அந்த படத்தில் வந்த முத்தக்காட்சி தேவையில்லாத ஒன்று, அதன் பிறகு தான் இருவருக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டு இருக்கலாம் நடிகர் என்று தெரிந்துதான் விஜய்யின் மனைவி அவரை திருமணம் செய்து கொண்டு, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். குறிப்பிட்ட ஒரு நடிகையுடன் மட்டும்,இணைந்து அந்த முத்தக்காட்சியில் நடித்ததை அவரது மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விஜய்காந்த்,ராதிகா: த்ரிஷா, விஜய் குறித்து ஒரு வதந்தி பரவுகிறது என்றால், அந்த வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்து இருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை. விஜய்யின் 50வது பிறந்த நாளில் த்ரிஷா l love for ever என்று பதிவிடுகிறார். இதனால் இருவரும் குறித்தும் மேலும் சர்ச்சை செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. நடிகை ராதிகா, விஜய்காந்தை திருமணம் செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், அப்போது அதுகுறித்து எதுவும் பேசாத விஜய்காந்த், அமைதியாக இருந்து பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு மட்டுமில்லாமல், அதன் பிறகு, விஜய்காந்த், ராதா இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவே இல்லை.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆனால், த்ரிஷா, விஜய் இருவர் குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், கோட் படத்தில் தேவையே இல்லாமல், அவரை ஒரு பாடலுக்கு ஆட்டம் போட வைத்தார். இந்த பிரச்சனையால் தான் மனைவி மற்றும் மகன் என அனைவரும் அவரை விட்டு விலகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர் மீது பாசம் இல்லாமல் இல்லை. ஆனால், மூன்றாவது ஒரு நபரால் குடும்பத்தில் பிரச்சனை வரும் போது, அது உண்மை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொருப்பு விஜய்யினுடையது. ஆனால், விஜய் அதை செய்யாமல் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு ஜோடியாக விமானத்தில் செல்கிறார்கள் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் போது, விஜய் அந்த திருமணத்திற்கு போகாமல் இருந்தா என்ன. இப்படி ஒரு விஷயத்தை எந்த மனைவியதால் தான் பொறுத்துக் கொல்ல முடியும். த்ரிஷா விஜய், அஜித என பலருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். ஆனால், அவர்களுடன் த்ரிஷாவை சேர்த்துவைத்து பேசினார்களா? விஜய்யுடன் மட்டும் சேர்த்து பேச என்ன காரணம், அப்போது ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











