twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் பண மோசடியில் சிக்கும் பவர்ஸ்டார்

    |

    சென்னை: புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த நபரிடம் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பவர்ஸ்டார் மீது வழக்கு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சூப்பர் ஸ்டாரை விட எனக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே கணிசமான ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன். இவர் திரைப்பட்ங்களில் நடிப்பதற்கு முன்பு, பலரிடம் பண மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன.

    Cheating case filed against Powerstar!

    2013 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு ரூ.1000 கோடி கடன்பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் சில மோசடி வழக்குகளும் உள்ளன.

    சென்னை புது வண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த தயாநிதி என்பவர் பவர்ஸ்டார் தன்னிடம் ரூ. 4.16 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கடந்த ஆண்டு புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தயாநிதி சினிமா வாய்ப்பு வேண்டி பவர்ஸ்டாரிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் சினிமா வாய்ப்புக்கு உதவாமலும் பணத்தை திருப்பி தராமலும் பவர்ஸ்டார் மோசடி செய்துவிட்டார் என்றும் புகார் அளித்தார்.

    அவரின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வரும் போலீசார், தற்போது பவர்ஸ்டார் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, மனிதன், கவன் போன்ற படங்களில் நடித்த பவர்ஸ்டார் இப்போது மெர்லின், மோகனா, கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா மற்றும் என்ன தவம் செய்தேனோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    English summary
    Chennai police filed cheating case against actor Powerstar Srinivasan. A person named Dhayanidhi gave a complaint against powerstar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X