Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தமிழ்நாடே என்னை ‘செல்லம்’னு தான் கூப்பிடுது... நான் கொடுத்து வச்சவன்: பிரகாஷ்ராஜ்
சென்னை: 'என்ன செல்லம் நீ' என கொஞ்சலாகக் கூறினாலே, போதும் உடனடியாக நமது மனக் கண்ணில் வந்து விடுவார் நடிகர் பிரகாஷ்ராஜ். அந்தளவுக்கு 'செல்லம்' என்ற வார்த்தையால் பிரபலமானவர் அவர்.
கில்லி படத்தில் த்ரிஷாவை அவர் செல்லமாக 'செல்லம்..செல்லம்' என அழைக்கும் போதெல்லாம், அவர் அப்படத்தின் வில்லன் என்பதையும் மறந்து ரசிகர்கள், பிரகாஷ்ராஜை ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது போன்ற பாக்கியம் சில வில்லன் நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் செல்லம் என்ற வார்த்தை மூலம் பிரபலமான பிரகாஷ்ராஜ் தனது அனுபவத்தை ஒரு பத்திரிக்கையில் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளார்...
எல்லாரும் ‘செல்லம்’ தான்....
நான் எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல லைட் மேன், மேக்கப் மேன், செட் உதவியாளர்கள் எல்லாரையும் ‘செல்லம்'னு தான் கூப்பிடுவேன்.
காப்பியடித்த தரணி....
‘இங்க வா செல்லம், இப்படி நில்லு செல்லம், செல்லம் ஏண்டா இப்படி பண்ற'னு நான் மத்தவங்களைக் கூப்பிடுறதைப் பார்த்து, டைரக்டர் தரணி அதை அப்படியே கில்லி படத்துல வச்சிட்டார்.
தமிழ்நாட்டுக்கே நா செல்லம்....
அந்த ஒரு படத்துல நான் த்ரிஷாவை ‘செல்லம்'னு கூப்பிட்டேன். இப்போ தமிழ்நாடே என்னை ‘செல்லம்'னு தான் கூப்பிடுது.
நீ என்ன பிரகாஷ்ராஜா....?
ஒரு வழக்கறிஞர் தோழி சொன்னாங்க, ‘ பிரகாஷ், நான் ரெகுலரா பூ வாங்குற அம்மாகிட்டே ஒரு ஆளு வம்பிழுத்துட்டே இருந்தான். அந்தம்மா கோபத்துல திட்டிட்டாங்க. அதுக்கு ‘கோச்சுக்காத செல்லம்'னு அவன் சொல்ல, ‘நீ என்ன பெரிய பிரகாஷ்ராஜா? என்னைச் செல்லம்னு கூப்பிடற?னு அந்தம்மா கோபப்பட்டாங்க'னு சொன்னாங்க.
நா கொடுத்து வச்சவன்....
இந்த அன்பு கிடைக்கிறாதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். இதை விட வாழ்க்கையில வேற என்ன வேணும் செல்லம்? என பூரித்துப் போகிறார் பிரகாஷ்ராஜ்.