Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை ரேவதிக்கு 22ம் தேதி விவாகரத்து
ஆஷா கேளுண்ணி என்ற இயற் பெயர் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த ரேவதி. இவரது கணவர் பெயர் சுரேஷ் மேனன். இவர் தயாரிப்பாளராக, இயக்குநராக, கேமராமேனாக இருந்தவர். இருவரும் 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.
இருவரும் ஆரம்பத்தில் மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். பின்னர் சந்தேகப் புயல் வீசவே இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரையும் சமசரப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பலன் தரவில்லை.
இந்த நிலையில், பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை குடும்பநல கோர்ட்டில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.12 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.
இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று தெரிகிறது.