Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
அன்புச்செழியன் மீதான புகாரை விசாரிக்க போலீசுக்கு இடைக்கால தடை: சென்னை ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது சாவுக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என்று அசோக் குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் அன்புச்செழியன் மீது வழக்கப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் போலீசார் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின்கீழ் இயங்கும் கந்துவட்டி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.