Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அன்புச்செழியன் மீதான புகாரை விசாரிக்க போலீசுக்கு இடைக்கால தடை: சென்னை ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது சாவுக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என்று அசோக் குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் அன்புச்செழியன் மீது வழக்கப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் போலீசார் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின்கீழ் இயங்கும் கந்துவட்டி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.