Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்
சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து விஷால் மனு அளித்தார். ஆனால் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மறுத்தது.
காவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும் என பாண்டவர் அணியின் தலைவர் நாசர் தெரிவித்தார். இதையடுத்து தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையை உத்தரவிடுமாறு கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஷாலின் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தலே ரத்து செய்யப்பட்டுள்ளதால் விஷாலின் மனு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலை ரத்து செய்ய வைக்க சதி நடந்து வருவதாக பாண்டவர் அணியினர் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விஷால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்று நாசர் விமர்சித்தார். இந்நிலையில் ராதாரவி கூறியிருப்பதாவது, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய், சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயாவும், பாண்டவர் அணி சொல்வது எல்லாமே பொய் என்று தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவியும் அதையே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் நாடக கலைஞர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.