Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்
சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் ஜூன் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து விஷால் மனு அளித்தார். ஆனால் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மறுத்தது.
காவல்துறையின் நடவடிக்கைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும் என பாண்டவர் அணியின் தலைவர் நாசர் தெரிவித்தார். இதையடுத்து தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையை உத்தரவிடுமாறு கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விஷாலின் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தலே ரத்து செய்யப்பட்டுள்ளதால் விஷாலின் மனு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலை ரத்து செய்ய வைக்க சதி நடந்து வருவதாக பாண்டவர் அணியினர் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விஷால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.
பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்று நாசர் விமர்சித்தார். இந்நிலையில் ராதாரவி கூறியிருப்பதாவது, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய், சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயாவும், பாண்டவர் அணி சொல்வது எல்லாமே பொய் என்று தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவியும் அதையே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் நாடக கலைஞர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!