Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது.. மறுதேர்தல் நடத்த உத்தரவு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத காலத்திற்குள் மறு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது..
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் வாக்குகள் எண்ணப்படவில்லை. இதற்கிடையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை உள்ளிட்டோரும், தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யகோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கல்யாணசுந்தரம், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸை தேர்தல் அதிகாரியாக நியமித்த நீதிபதி புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்..
தொப்புள் மட்டுமல்ல.. அதையும் காட்டிய நடிகை.. உருப்படியா பண்ணுங்க.. சலித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்!
மேலும், மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கீதா தொடர்ந்து கவனிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.