twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் எஸ்கேப்பான ரஞ்சித்.. வெள்ளிக்கிழமை வரை கைது செய்ய தடை விதித்தது ஹைகோர்ட் கிளை!

    |

    மதுரை: இயக்குநர் பா ரஞ்சித்தை கைது செய்ய வெள்ளிக்கிழமை வரை தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

    இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார் ரஞ்சித்.

    ராஜ ராஜ சோழனை அயோக்கியன் என்றும், வார்த்தைக்கு வார்த்தை அவன் இவன் என்றும் மிகவும் இழிவாக விமர்சித்தார் ரஞ்சித். ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்த ரஞ்சித்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.

    மனுத்தாக்கல்

    மனுத்தாக்கல்

    ரஞ்சித் மீது பல்வேறு காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார்.

    இன்றைக்கு ஒத்திவைப்பு

    இன்றைக்கு ஒத்திவைப்பு

    அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் ரஞ்சித்துக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் 19ஆம் தேதி அதாவது இன்று வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார்.

    வெள்ளிக்கிழமை வரை தடை

    வெள்ளிக்கிழமை வரை தடை

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை வெள்ளிக்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உயர்நிதிமன்ற கிளை உத்தரவிட்டது.

    தடை நீட்டிப்பு

    தடை நீட்டிப்பு

    முன்ஜாமின்கோரி பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணை மேற்கொண்டார். கைதுக்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Chennai high court Madurai Bench has extend bail for Director Pa Ranjith till friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X