Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் எஸ்கேப்பான ரஞ்சித்.. வெள்ளிக்கிழமை வரை கைது செய்ய தடை விதித்தது ஹைகோர்ட் கிளை!
மதுரை: இயக்குநர் பா ரஞ்சித்தை கைது செய்ய வெள்ளிக்கிழமை வரை தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார் ரஞ்சித்.
ராஜ ராஜ சோழனை அயோக்கியன் என்றும், வார்த்தைக்கு வார்த்தை அவன் இவன் என்றும் மிகவும் இழிவாக விமர்சித்தார் ரஞ்சித். ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்த ரஞ்சித்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
மனுத்தாக்கல்
ரஞ்சித் மீது பல்வேறு காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார்.
இன்றைக்கு ஒத்திவைப்பு
அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் ரஞ்சித்துக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் 19ஆம் தேதி அதாவது இன்று வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிபதி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார்.
வெள்ளிக்கிழமை வரை தடை
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை வெள்ளிக்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உயர்நிதிமன்ற கிளை உத்தரவிட்டது.
தடை நீட்டிப்பு
முன்ஜாமின்கோரி பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணை மேற்கொண்டார். கைதுக்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.