Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நெஞ்சம் மறப்பதில்லை நாளை ரிலீஸ்...தடையை நீக்கியது சென்னை ஐகோர்ட்
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்தி விட்டதாகவும், 82 லட்சம் தொகையை வட்டியுடன் வருகின்ற ஜூலை மாதத்திற்கு முன்பு திருப்பி செலுத்த உள்ளதால் படத்திற்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அறிவிக்கப்பட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை படம் நாளை ரிலீசாவது உறுதியாகி உள்ளது.