Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிப்ரவரி 18...சென்னையில் சர்வதேச திரைப்பட விழா...எஸ்பிபி.,ஐ கவுரவிக்க திட்டம்
சென்னை : கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்கள் ஆன்லைன் வழியாக தான் நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய சென்னை சர்வதேச திரைப்பட விழா, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 18 ம் தேதி துவங்க உள்ள சென்னை திரைப்பட விழாவிற்கான களப்பணிகள் நிறையவடையும் நிலையில் உள்ளன.
இது பற்றி சென்னை சர்வதேச திரைப்பட விழா கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ஏவிஎம் சண்முகம் கூறுகையில், அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளை நிரப்பிட அரசு அனுமதி அளித்துள்ளது.
அதனால் திரைப்பட திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்த முடிவு செய்தோம். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சமூக இடைவெளியை பின்பற்றி இதனை நடத்த உள்ளோம் என்றார்.
இந்த ஆண்டு சென்னை திரைப்பட விழாவில் புதிய அறிமுகமாக சினிமா துறைக்கு தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு மாஸ்டர்கிளாஸ் வழங்கப்பட உள்ளது. இது பற்றி ஏவிஎம் சண்முகம் கூறுகையில், கே.வி.ஆனந்த், ஸ்ரீநிவாஸ் மோகன், அருள் மூர்த்தி, பாலாஜி மோகன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் இந்த மாஸ்டர் கிளாசில் இடம்பெற உள்ளனர் என்றார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கவுரவம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். திறப்பு விழாவன்று பல சிறப்பு நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.