Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெளிவரும் முன்பே... இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற விஜய் சேதுபதி படம்!
விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் திரைப்படம் இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் இயக்குநர் பிஜு இயக்கத்திலும் உருவாகியுள்ள சென்னை பழனி மார்ஸ் ஜூலை 26ந் தேதி வெளியாகிறது.
வெளிவரும் முன்பே சென்னை பழனி மார்ஸ் இரண்டு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளை தட்டிக் கொண்டு வந்துள்ளது.
பின்னாக்கிள் ஃபிலிம் அவார்ட்ஸ் விழாவில் பெஸ்ட் நேரேட்டிவ் பிளாட்டினம் அவார்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பெஸ்ட் டிராமா கிராண்ட் ஜூரி கோல்ட் அவார்டையும் பெற்றுள்ளது . இரு விருதுகளுமே அமெரிக்க விருதுகளாகும். 26ந்தேதி படம் வெளியாகும் இந்நேரத்தில் விருதுகளின் அறிவிப்பால் மனம் குளிர்ந்துள்ளது படக்குழு.
படத்தில் பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.. நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய மூன்றையும் பிஜு செய்துள்ளார். படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே பிஜு இயக்கிய ஆரஞ்சு மிட்டாய் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.