Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்ளாஸை அள்ளும் சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள ஷார்ட் ஃபிலிம்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள குறும்படம் மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெண்கள் அவசர காலங்களில் உதவி கேட்க பல்வேறு செயலிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி எப்படி பெண்களுக்கு உதவுகிறது என்பது குறித்து குறும்படம் ஒன்றை சென்னை போலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
3 தேசிய விருதுகளை பெற்ற படம்... பிரஷாந்த் நடிப்பில் 'அந்தாதுனை' இயக்குகிறார் 'ரீமேக்' ராஜா
இளம்பெண்
அதில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் இளம்பெண் ஒருவர் தனது வண்டி பழுதால் நடு வழியில் மாட்டிக்கொள்கிறார். அப்போது இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்கின்றனர்.
இருக்கும் இடத்திற்கு
இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவலன் செயலியின் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, நேராக அந்த பெண் இருக்கும் இடத்திற்கே வருகின்றனர் போலீசார்.
இளைஞர்கள் கைது
பின்னர் அந்த பெண்ணை மீட்டு அவரது வீட்டில் கொண்டு சென்று விடுகின்றனர். போலீஸை பார்த்து தப்பியோடிய இளைஞர்களையும் பிடித்து கைது செய்கின்றனர்.
நல்ல வரவேற்பு
இப்படியாக முடிகிறது அந்த குறும்படம். சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள இந்த குறும்படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
|
காவல்துறைக்கு நன்றி
இந்த வேகம் நிஜமாகவே நடந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.. தமிழ் நாடு காவல்துறைக்கு நன்றி.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
போற்றுதலுக்குரியவை
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒவ்வொரு செயல்களும் பெருமைக்குரியவை மற்றும் போற்றுதலுக்குரியவை.. காவல்துறையினருக்கு நன்றி. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.