Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அப்ளாஸை அள்ளும் சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள ஷார்ட் ஃபிலிம்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள குறும்படம் மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெண்கள் அவசர காலங்களில் உதவி கேட்க பல்வேறு செயலிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி எப்படி பெண்களுக்கு உதவுகிறது என்பது குறித்து குறும்படம் ஒன்றை சென்னை போலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
3 தேசிய விருதுகளை பெற்ற படம்... பிரஷாந்த் நடிப்பில் 'அந்தாதுனை' இயக்குகிறார் 'ரீமேக்' ராஜா
இளம்பெண்
அதில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் இளம்பெண் ஒருவர் தனது வண்டி பழுதால் நடு வழியில் மாட்டிக்கொள்கிறார். அப்போது இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்கின்றனர்.
இருக்கும் இடத்திற்கு
இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவலன் செயலியின் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, நேராக அந்த பெண் இருக்கும் இடத்திற்கே வருகின்றனர் போலீசார்.
இளைஞர்கள் கைது
பின்னர் அந்த பெண்ணை மீட்டு அவரது வீட்டில் கொண்டு சென்று விடுகின்றனர். போலீஸை பார்த்து தப்பியோடிய இளைஞர்களையும் பிடித்து கைது செய்கின்றனர்.
நல்ல வரவேற்பு
இப்படியாக முடிகிறது அந்த குறும்படம். சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள இந்த குறும்படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
|
காவல்துறைக்கு நன்றி
இந்த வேகம் நிஜமாகவே நடந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.. தமிழ் நாடு காவல்துறைக்கு நன்றி.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
போற்றுதலுக்குரியவை
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒவ்வொரு செயல்களும் பெருமைக்குரியவை மற்றும் போற்றுதலுக்குரியவை.. காவல்துறையினருக்கு நன்றி. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.