Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கொடுத்த பரபரப்பு புகார்.. சென்னை போலீஸ் எடுக்கும் நடவடிக்கை என்ன?
சென்னை: பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 42 வருடங்களாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ ரெக்கார்டிங் தியேட்டரில் தான் இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
டாப் ஆங்கிளில் பிரபல நடிகையின் 'பிங்க்' செல்ஃபி.. இதுக்கு மேல லீன் ஆகிடாதீங்க.. கெஞ்சும் ஃபேன்ஸ்!
நிலப் பிரச்சனை
கடந்த ஆண்டு, நிலம் சம்பந்தமான பிரச்சனை இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் இடையே பூதாகரமாக வெடித்தது. இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டரை இடித்து விட்டு, புதிதாக ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
வழக்கு
ஸ்டூடியோவை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டூடியோ வலியுறுத்தியதற்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா மற்றும் சினிமா கலைஞர்கள் தலைமையில் போராட்டங்களும் நடந்தன. பின்னர், இது தொடர்பாக இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.
இசைக் கருவிகள்
இந்நிலையில், இந்த லாக்டவுனை பயன்படுத்திக் கொண்டு, இளையராஜாவின் அறையில் உள்ள விலை உயர்ந்த இசைக்குறிப்புகள் மற்றும் இசைக் கருவிகளை உரிமையாளர் சாய் பிரசாத், கள்ளச்சாவி போட்டு, திருடி உள்ளதாகவும், சில இசைக் கருவிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இளையராஜா தரப்பில் இருந்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.
Recommended Video
நேரடியாக விசாரணை
இந்நிலையில், இளையராஜாவின் புகார் தொடர்பாக, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நாளை (திங்களன்று) நேரடியாக சென்று விசாரணை நடத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இளையராஜாவின் ரெக்கர்டிங் தியேட்டரில் சோதனை நடத்தி, இசைக் குறிப்புகள் மற்றும் இசைக் கருவிகள் சேதப்படுத்தப்பட்டதா என்றும் விசாரிக்க உள்ளதாக தகவல்.