Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திருமணச் செலவை வெள்ள நிவாரண நிதிக்குத் தருவோம்- சந்தியா
சென்னை: தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை தமிழக வெள்ள நிவாரணத்திற்கு வழங்கவிருப்பதாக நடிகை சந்தியா கூறியிருக்கிறார்.
காதல் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான சந்தியா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சுமார் 40 க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இவருக்கும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும் சென்னையில் நடைபெறவிருந்த திருமணம் மழை, வெள்ளம் காரணமாக நேற்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் எளிமையாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் தனது திருமணத்திற்கு ஒதுக்கிய தொகையை சென்னை மழை நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம்.
வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் அந்தச் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்காக கொடுக்கவிருப்பதாக என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்" என்றார்.
திருமணம் எளிமையாக முடிந்தாலும் அந்தத் தொகையை மழை நிவாரணத்திற்கு அளிக்க முன்வந்திருக்கும் சந்தியா மற்றும் அவரது பெற்றோர்கள் பாராட்டத்தக்கவர்கள் தான்!