'தலைவா' டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்
சென்னை: சென்னை தியேட்டர்களில் தலைவா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் பண்டிகை தினமான நாளை மறுநாள் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. விஜய் ரசிகர்கள் தலைவா படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள தியேட்டர்கள் தலைவா பட டிக்கெட் முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கான காரணம் விரைவில் தெரிய வரும்.
தலைவா தமிழகத்தில் மட்டும் 978 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications