twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’... இது பேச்சுலர்ஸ் கதை!

    By Shankar
    |

    ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை...' - இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் இருந்தாலும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்க தெரிந்தவன் பிழைத்து கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர்.

    பேச்சுலர்ஸ் என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாக வருகிறது, "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது"

    Chennai Ungalai Anbudan Varaverkirathu

    கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ஏடிஎம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது " படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன்.

    பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    "ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவு காணும் சென்னையில் வாழ நினைக்கும் பேச்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்த திரைப்படம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்" என்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.

    English summary
    Chennai Ungalai Anbudan Varaverkirathu is a new movie based Chennai bachelors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X