காசோலை மோசடி வழக்கு.. நடிகர் பிரபாஸின் தம்பிக்கு 1 ஆண்டு சிறை!
பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் தம்பி பிரபோத் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
செகந்திராபாதைச் சேர்ந்த ஒரு பைனான்சியரிடம் ரூ 80 லட்சத்தை இரண்டு மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறி கடன் பெற்றுள்ளார் பிரபோத்.

இந்தக் கடனுக்காக பிரபோத் கொடுத்த ரூ 43 லட்சத்துக்கான காசோலை வங்கியில் பணமின்றி திரும்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து பிரபோத் மீது ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார் பைனான்சியர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபோத்துக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


Click it and Unblock the Notifications











