Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செக் மோசடி வழக்கு: 11ம் தேதி கோர்ட்டில் ஆஜராக நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவு
சென்னை: செக் மோசடி வழக்கில் வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ககன் போத்ரா என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற திரைப்படத்தில் நடித்தவர் சாலிகிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற அனு. இவரும், அவரது தாய் சம்பூரணமும் ஒரு சொத்து மீது 45 லட்ச ரூபாய் கடன் வாங்கினர். அதற்காக அவர்கள் கொடுத்த காசோலைகள் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இது தொடர்பாக அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, அவர்கள் மீது செக் மோசடி வழக்கு பிரிவின் கீழ், நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு 8வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் புவனேஸ்வரி மற்றும் அவரது தாயார் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி புவனேஸ்வரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாஜிஸ்திரேட் வழக்கை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் புவனேஸ்வரி தனது தாயுடன் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.