Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சி2எச் செக் மோசடி வழக்கு... நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மகள்!
சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி தருமபுரி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் "டைரக்ட் 2 ஹோம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி (25) செயல்பட்டார். புதிய திரைப்படங்களை வெளியிட இந் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வைப்புத் தொகை பெறப்பட்டு, விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, தருமபுரி ஆட்சியர் அலுவலகப் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (28) ரூ. 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி தருமபுரிக்கான உரிமம் பெற்றுள்ளார்.
ஆனால், அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக பிரசன்னா கோரியதைத் தொடர்ந்து, ரூ. 4.53 லட்சத்துக்கான காசோலையை நிவேதா பிரியதர்ஷிணி வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பியது. இதையடுத்து, தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் பிரசன்னா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித் துறை நடுவர் ரத்தினவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.