Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அதான் ஒரிஜினல் டிவிடியே தர்றோமே.. திருட்டு விசிடி எதுக்குங்க? - சேரன்
திருட்டு சி.டி.யை மக்கள் ஆதரிக்கக் கூடாது என திரைப்பட இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருட்டு சி.டி. பிரச்னை தொடர்பாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர, காவல் துறை ஆணையரகத்துக்கு மனு கொடுக்க புதன்கிழமை வந்த சேரன், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நான் இயக்கிய "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற திரைப்படத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் டி.வி.டி.யாக முதல் நாளிலேயே வெளியிட்டேன். இதை எனது நிறுவனமான சி2எச் நிறுவனம் மாநிலம் முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.
இன்று ஒரு குடும்பம் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டாயமாக தேவைப்படுகிறது. அதைவிட ரூ. 50 செலுத்தினாலே இந்த திரைப்படத்தின் ஓரிஜினல் டிவிடியை எங்களிடம் பெற்று, மக்கள் வீடுகளில் இருந்தபடியே திரைப்படத்தை எவ்வித சிரமமும் இன்றி கண்டு ரசிக்கலாம்.
இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே எங்களது ஒரிஜினல் சி.டியிலிருந்து காப்பி செய்து திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்ததாக மாநிலம் முழுவதும் 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல கேபிளிலும் இந்த திரைப்படம் எவ்வித அனுமதியும் இன்றி ஒளிபரப்பப்படுகிறது.
இது தொடர்பாக 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. திருட்டு சி.டி.க்கு மக்கள் எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்கக் கூடாது. நாங்கள் தரமான ஒரிஜினல் டிவிடியை குறைந்த விலைக்குக் கொடுத்தபோதும், மக்கள் திருட்டு சிடி வாங்குவது வருத்தம் தருகிறது.
திருட்டு சி.டி. விற்பவர்கள், கேபிள் ஒளிபரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் செய்துள்ளேன். இப்போது ஆணையரிடம் புகார் செய்ய வந்தேன். இந்தப் பிரச்னையில் தமிழக காவல்துறை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது," என்றார் சேரன்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!