Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெற்றோர் வேண்டாம், காதலன் மட்டுமே வேண்டும்: இயக்குனர் சேரனின் மகள் அடம்
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி(20) சந்துரு என்பவரை காதலிக்கிறார். சந்துரு நல்லவர் இல்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதனால் தான் அவர்களின் காதலை எதிர்க்கிறேன் என்று நேற்று சேரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்தார். அப்போது அவர் கண்ணீர் சிந்தினார்.
இதையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து மகளிர் போலீசார் தாமினிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் தாமினியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. எனக்கு என் காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். நேற்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அவருக்கு உதவி கமிஷனர் ஷியாமளாதேவி அறிவுரை வழங்கியுள்ளார்.
முதலில் படித்து முடி. உன் காதலை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்குள் உன் காதலனும் நல்ல வேலையில் சேரட்டும். அதுவரை பொறுமையாக இரு என்று தாமினியிடம் போலீசார் தெரிவித்தனர். அதற்கு தாமினி கூறுகையில், கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்வேன். ஆனால் சந்துருவை மட்டும் பிரிந்திருக்க என்னால் முடியாது என்றார்.
தாமினியிடம் மணிக்கணக்கில் பேசியும் பலனில்லை. அவரோ தன் காதலன் மட்டுமே வேண்டும் என்றும், இனியும் பெற்றோருடன் சேர்ந்து இருக்க முடியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நேற்று நள்ளிரவில் சேர்த்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது. அப்போது தாமினிக்கு மீண்டும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது.