Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சேரன்.. வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஹேப்பி!
Recommended Video
சென்னை: மதுமிதாவை இயக்குநர் சேரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முதலில் பங்கேற்ற 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மதுமிதா. இவர் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.
இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒவ்வொரு டாஸ்க்கிலும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துகொள்வார்.
ஸ்கோர் செய்த மது
குறிப்பாக மதுமிதா, சரோஜா தேவி போன்றும், நாட்டாமை டாஸ்க்கின் போதும் தனது அசத்தல் நடிப்பால் கலக்கி விட்டார். அவரின் நடிப்பை பார்த்த நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளினர்.
காவிரி பிரச்சனை
பிக்பாஸ் வீட்டில் புறம் பேசாமல் மனதில் பட்டதை பட்டென பேசி நேர்மையாக விளையாடினார் மதுமிதா. ஆனால் ஒரு டாஸ்க்கின் போது அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக போட்டியாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.
வெளியேற்றப்பட்ட மது
இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார் மதுமிதா.
மாறி மாறி புகார்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீஸ் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் மீது மதுமிதா போலீஸில் புகார் அளித்தார்.
ஏமாற்றம்
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மதுமிதா, தன்னை துன்புறுத்தியவர்களின் பெயர்களை கூறியதோடு பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்தும் விவரித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மதுமிதா பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
சந்திக்கவில்லை
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மற்ற போட்டியாளர்களோ அல்லது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகோ போட்டியாளர்கள் யாரும் மதுமிதாவை சந்தித்ததாக தெரியவில்லை.
சேரன் சந்திப்பு
அண்மையில் இயக்குநர் சேரனிடம் மதுமிதாவை சந்திப்பீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த சேரன் நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மதுமிதாவை இயக்குநர் சேரன் சந்தித்துள்ளார்.
|
மகிழ்ச்சியில் மூழ்கியது
சேரன் தங்களின வீட்டிற்கு வந்து நலம் விசாரித்த போட்டோவை மதுமிதாவின் கணவர் மோசஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் உங்களின் வருகையால், எங்களின் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியது. வருகைக்கு நன்றி சேரன் சார். ரொம்பவும் சந்தோஷம் என பதிவிட்டிருக்கிறார்.
|
சேரனுக்கு நன்றி
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், சேரனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். புல்லிங்குக்கு எதிராக மதுமிதாவுக்கு ஆதரவாக நின்ற எங்கள் சேரன் சாருக்கு நன்றி.. உங்களை சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த போட்டோவை ஷேர் செய்தது நன்றி சகோதரரே என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.