Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி
சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார்.
அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.
யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார்.
விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!