Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... தியேட்டரில் வெளியிடுகிறார் சேரன்!
தமிழ்நாட்டு தியேட்டர்காரர்களின் அராஜகம் தாங்காமல்தான் சி2ஹெச் என்ற திட்டத்தை அறிவித்தார் இயக்குநர் சேரன். புதுப் படங்களை தியேட்டர்களில் வெளியிடும் அதே நேரத்தில் டிவிடியாக வெளியிட்டு ரசிகர்களின் வீடுகளுக்கே போய்க் கொடுக்கும் திட்டம்.
இதை சேரன் நடைமுறைப்படுத்த முயன்றபோது தியேட்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு. ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத்தின் துணையுடன் சி2ஹெச் முறையில் முதல் படமாக தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கையை வெளியிட்டார் சேரன்.
படம் குறித்து பாஸிடிவான கருத்துக்கள் வந்தாலும், வணிக ரீதியாக சேரன் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்தப் படத்தின் டிவிடிகள் இன்னும் அதிகமாக விற்றிருந்தால், தொடர்ந்து பல படங்கள் அதே முறையில் வெளியாகி இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. இப்போது இந்தத் திட்டத்தில் பணம் செலுத்திய முகவர்கள் சிலர் சேரனுக்கு எதிராகத் திரும்ப, வழக்கு, கோர்ட் என அலைகிறார் சேரன்.
இன்னொரு பக்கம், தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை மீண்டும் தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சேரன் கூறுகையில், "இப்படத்தை நிறையப் பேர் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தவர்களும் திரையரங்குகளில் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி திரையில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இப்படத்தை கண்கள் முழுவதும் கனவுகளோடு திரியும் இளைஞர் கூட்டத்திற்கு காணிக்கை ஆக்குகிறேன்," என்றார்.
அது கிடக்கட்டும் சேரன்... ஏகப்பட்ட பிஸினஸ் கனவுகளோடு உங்கள் சி2ஹெச் திட்டத்தில் சேர்ந்தார்களே... அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?