Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்! - சேரன்
சென்னை: சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்குத் தலை வணங்குகிறேன் என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியுள்ளார்.
சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசிய அரசியல் பேச்சு பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக பலரும் அதுபற்றிய தங்கள் புரிதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த விழாவில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு அரசியல்வாதியாக தோற்றுப் போனது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், சொந்தத் தொகுதியில் தோற்றது சிவாஜிக்கு தோல்வியல்ல, அந்த மக்களுக்குத்தான் என்று குறிப்பிட்டார்.
மேலும் அரசியலில் ஜெயிக்க புகழ், செல்வாக்கு மட்டும் போதாது, வேறொன்றும் வேண்டும். அது என்ன என்பது மக்களுக்குத்தான் தெரியும் என்றும் ரஜினி கூறினார்.
அவரது இந்த பேச்சு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சேரன், "சிவாஜி அரசியலில் வெற்றியடையாதது மக்களின் தோல்வியே தவிர சிவாஜியின் தோல்வி அல்ல' என்ற ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன். மக்கள் ஏன் இப்படி சொன்னார் என யோசிக்கவேண்டும். அந்த ஒரு வார்த்தையின் அர்த்தம் புரிந்தால்," என்று கூறியுள்ளார்.