twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேரன் பட பாடலுக்கு தடை நீட்டிப்பு சென்னை:சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் வரும் ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி பாடலுக்கு சென்னை சிட்டி நீதிமன்றத்தில்விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பாண்டிச்சேரி கலைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். கே.ஏ. குணசேகரன் தாக்கல் செய்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது: நான் இசையமைத்து வெளியிட்ட பாடல்கள் தொகுப்பில் ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற பாடல் கடந்த 20 ஆண்டுகளாகமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள தவமாய் தவமிருந்து படத்தில் இந்தப் பாடலை சேர்த்துள்ளதாக தமிழ் வாரப்பத்திரிகை ஒன்றில் செய்தி வந்துள்ளது.இந்தப் பாடலுக்கான உரிமம் என்னிடம் தான் உள்ளது. எனவே இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு 12வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற பாடலுக்கு நவம்பர் 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.இந்த தடை உத்தரவை நீட்டிக்கும் படி மனுதாரர் தரப்பில் நேற்று நீதிபதியிடம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி பாடலுக்கானதடையை வரும் 30ம் தேதி வரை நீட்டித்தார்.

    By Staff
    |

    சென்னை:


    சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் வரும் ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி பாடலுக்கு சென்னை சிட்டி நீதிமன்றத்தில்விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பாண்டிச்சேரி கலைக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். கே.ஏ. குணசேகரன் தாக்கல் செய்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:

    நான் இசையமைத்து வெளியிட்ட பாடல்கள் தொகுப்பில் ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற பாடல் கடந்த 20 ஆண்டுகளாகமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள தவமாய் தவமிருந்து படத்தில் இந்தப் பாடலை சேர்த்துள்ளதாக தமிழ் வாரப்பத்திரிகை ஒன்றில் செய்தி வந்துள்ளது.

    இந்தப் பாடலுக்கான உரிமம் என்னிடம் தான் உள்ளது. எனவே இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு 12வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற பாடலுக்கு நவம்பர் 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.

    இந்த தடை உத்தரவை நீட்டிக்கும் படி மனுதாரர் தரப்பில் நேற்று நீதிபதியிடம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி பாடலுக்கானதடையை வரும் 30ம் தேதி வரை நீட்டித்தார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X