Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 2000 நிவாரண உதவி… தமிழக அரசு அறிவிப்பு !
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ2000 நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நாடக கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும்.
இதனால் நாட்டுப்புற தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 2,124 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 6,618 பேருக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் விழாக்களுக்கு தடை
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாது அலை வீரியம் மிக்கதாக உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், கோவில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை
இதனால், நாட்டுப்புறக்கலைஞர்கள் அந்த திருவிழாக்களில் தொடர்புடைய கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை வாழ்வாதாரமாக நம்பி இருந்த கலைஞர்கள் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதனால், வாழ்வாதாரம் இழந்த கலைஞர்கள் மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
ரூ2000 நிதி உதவி
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டுப்புற கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசானை தற்போது வெளியாகி உள்ளது. நாடக கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.