Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேட்டி அளிக்க சென்றபோது கார் விபத்தில் குழந்தை நட்சத்திரம் பலி
ராய்பூர்: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரமான ஷிவ்லேக் சிங் சாலை விபத்தில் பலியானார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜங்ஜிர்-சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்லேக் சிங்(14). அவரின் பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்கள். ஷிவ்லேக் சிங் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஷிவ்லேக் தன் அம்மா லேக்னா சிங், அப்பா ஷிவேந்திர சிங் மற்றும் நவீன் சிங் என்பவருடன் ராய்பூரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு சென்றபோது அவர்களின் கார் எதிரே வந்த டிரக் மீது மோதியது.
இதில் ஷிவ்லேக் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மற்ற மூன்று பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதில் ஷிவ்லேக் சிங்கின் அம்மா லேக்னாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரக் டிரைவரை தேடி வருகிறார்கள்.
ஷிவ்லேக் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க ராய்பூருக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அவரின் குடும்ப நண்பரான திரேந்திர குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஷிவ்லேக் சிங் சங்கட்மோச்சன் ஹனுமன், சசுரால் சிமர் கா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவரின் மறைவு செய்தி அறிந்த இந்தி சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
போக வேண்டிய வயதா இது, நம்பவே முடியவில்லையே என்று அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.