twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேட்டி அளிக்க சென்றபோது கார் விபத்தில் குழந்தை நட்சத்திரம் பலி

    By Siva
    |

    ராய்பூர்: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரமான ஷிவ்லேக் சிங் சாலை விபத்தில் பலியானார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜங்ஜிர்-சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்லேக் சிங்(14). அவரின் பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்கள். ஷிவ்லேக் சிங் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.

    Child artist Shivlekh Singh dies in road accident

    இந்நிலையில் ஷிவ்லேக் தன் அம்மா லேக்னா சிங், அப்பா ஷிவேந்திர சிங் மற்றும் நவீன் சிங் என்பவருடன் ராய்பூரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு சென்றபோது அவர்களின் கார் எதிரே வந்த டிரக் மீது மோதியது.

    இதில் ஷிவ்லேக் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மற்ற மூன்று பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அதில் ஷிவ்லேக் சிங்கின் அம்மா லேக்னாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரக் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    ஷிவ்லேக் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க ராய்பூருக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அவரின் குடும்ப நண்பரான திரேந்திர குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    ஷிவ்லேக் சிங் சங்கட்மோச்சன் ஹனுமன், சசுரால் சிமர் கா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவரின் மறைவு செய்தி அறிந்த இந்தி சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    போக வேண்டிய வயதா இது, நம்பவே முடியவில்லையே என்று அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Child artist Shivlekh Singh(14) who acted in several hindi Television serials died in a road accident in Raipur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X