Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புலி கிராபிக்ஸ்... திருப்தியடையாத சிம்புதேவன்.. மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்!
விஜய்யின் புலி படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், மீண்டும் முதலிலிருந்து அதைச் செய்யச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சிம்பு தேவன்.
புலி படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இணையத்தில் பலத்த வரவேற்பு மற்றும் அதற்கு இணையான கிண்டல் விமர்சனங்களை இந்த டீசர் சந்தித்து வருகிறது.
திரையுலக நட்சத்திரங்களான சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலரும் ‘புலி' டீசருக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆனாலும் இயக்குனர் சிம்புதேவனுக்கு இதுவரை இப்படத்திற்காக செய்யப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் திருப்திகரமாக இல்லையாம். ரசிகர்களை முழு உணர்வுடன் ரசிக்க வைக்கும்படி கிராபிக்ஸ் அமையவேண்டும் என்பதால், இந்த கிராபிக்ஸ் பணிகளை மறுபடியும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். இதனால், ‘புலி' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் செப்டம்பருக்குள் அனைத்தையும் முடித்து திட்டமிட்டபடி விஜயதசமிக்கு இந்தப் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளாராம்.