Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க… சிரஞ்சீவியிடம் கேட்ட மகேஷ் பாபு
ஹைதராபாத்: சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் உங்களின் நடிப்பை பார்த்து நான் வியந்து மிரண்டு போனேன். அந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று ஒரு ரசிகனாக நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று நடிகர் மகேஷ் பாபு அந்த படத்தின் ஹீரோ நடிகர் சிரஞ்சீவியிடம் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் என்பது வாழ்வின் ஒரு பகுதி. பொதுமக்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்கு அம்சமாக தெலுங்கு சினிமா இருந்துள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
தெலுங்கு சினிமாவின் 25 ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டமாக சினி மஹோத்சவம் பெரிய விழாவாக ஐதராபாத் சிட்டியில் கச்சிபோலி இன்டோர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட்டது.
சமூகத்திற்கு தெலுங்கு சினிமாவின் பங்களிப்பை இந்த நிகழ்வு மூலம் திரையுலக பிரபலங்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி இரவு நடந்த இந்த நிகழ்வில் டோலிவுட்டின் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
இனி ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை ஒரு பெண்தான் ஏற்க வேண்டும்.. சொல்கிறார் பியர்ஸ் ப்ரோஸ்னன்!
பல கலை நிகழ்ச்சிகள், நடிகைகளின் நடனங்கள் என குதூகலமாக கொண்டாடப்பட்டது. இதில் டோலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இருவரும் இணைந்திருக்கும் ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரு பெரிய ஸ்டார்களும் இணைந்திருக்கும் அரிய புகைப்படம் சினி மஹோத்சவம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டாராக இருப்பினும் மகேஷ் பாபு தனது அபிமானமான சிரஞ்சீவியின் மிகப் பெரிய ரசிகர். அவரை சந்தித்ததில் அவருடன் சில தரமான நேரத்தை பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியடைந்தார்.
அவர்கள் இருவரின் உரையாடலின் போது மகேஷ் பாபு சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான டீஸர் வெளியீடு பற்றியும் அதில் சிரஞ்சீவியின் நடிப்பையும் கம்பீரத்தையும் பார்த்து வியந்து போனதை பற்றியும் கூறினார். மேலும் அப்படத்தின் வெளியீட்டுக்காக ஒரு ரசிகனாக தானும் ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்தார். இந்த படம் சிறப்பானதாக அமைய தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் மகேஷ் பாபு. இது போன்ற பல இனிமையான நிகழ்வுகளுடன் நடைபெற்றது டோலிவுட்டின் 25அவது ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம்.