Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்… திரைப்பிரபலங்கள் ஆவேசம் !
சென்னை : சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அல்லு அர்ஜூனோட 'புட்ட பொம்மா' பாடல்... 4 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை
இதற்கு பாடகி சின்மயி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் பாலியல் புகார்
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி காமர்ஸ் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சினிமாவுக்கு வா
ஊரடங்கு காலத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக வந்த ஆசிரியர், கேமிரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸப்பில் மாணவிகளின் போட்டோவைப் பார்த்து, "Very cute" என்றும் அவர்களுடைய தோற்றம் குறித்தும் கருத்துத் தெரிவித்து வந்திருக்கிறார். மாணவிகளை சினிமாவுக்குஅழைத்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.
சிறையில் அடைக்க வேண்டும்
இந்நிலையில் PSBB பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியரை கண்டித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில், PSBB உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் வழக்குத் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள், கௌரவம் மற்றும் குடும்ப மரியாதை என்று பயந்து இதை மூடிமறைத்துவிடுகிறார்கள். இது குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ராஜகோபால் , ரமேஷ் பிரபா போன்றவர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்காக சிறையில் அடைக்க வேண்டும் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.
மனம் உடைந்து விட்டது
அதேபோல பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில், பாலியல் துன்புறுத்தல்களை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாது. காமர்ஸ் ஆசிரியரை பற்றி கேட்கும் போது மனம் உடைந்து விட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், தைரியமாக முன்வந்து புகார் அளித்த அனைத்து பெண்களையும் அவர்களின் தைரியத்தையும் நான் அன்போடு பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.